09-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 09-30-2018 இதழில் …

  • தலையங்கம்: படிப்பவர்களை “ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று எண்ண வைக்கும் வகையில் திரு. வீராவின் மிக அழகான “மின்சாரத்தின் கதை” மின்நூலாக வெளிவருகிறது என்ற அறிவிப்புடன் தொடங்கி அதனை எவ்வாறு வாங்குவது போன்ற விவரங்களும் சேர்த்துள்ளார் ஆசிரியர்.
  • அமைதி காப்போம்: ஆண்டில் ஒரு நாள் அமைதிக்காக ஒதுக்கினால் போதுமா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, உலகில் ஒவ்வொரு நாளும் அமைதி வேண்டுமென்றால், அதனை எவ்வாறு பெறுவது என்பதை கவிதையின் மூலமாக விளக்குகிறார் இராம்கி.
  • வாழும் கலை: இல்லற வாழ்வில் தம்பதியிடையே வரும் “சந்தேகம்” என்பது “நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்” என்ற உடுமலை நாராயண கவியின் வரிகளை அடிப்படையாக கொண்டு அழகான கதையின் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • பிள்ளையார்: ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை வரிசைப்படுத்தி முதல் கடவுள் விநாயகரைத் துதி பாடுகிறார், கேயென்னார். பிள்ளையார் சதுர்த்திக்கு படித்து வணங்கி மகிழ்வீராக.
  • அளசிங்கம்: விவேகானந்தரின் அமெரிக்கப் பயணமும், அவர் ஆற்றிய சொற்பொழிவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அவர் அமெரிக்கா வருவதற்கு வேண்டிய பண உதவியும், மற்ற எற்பாடுகளும் செய்தது யார் தெரியுமா? அறிந்து கொள்ளப் படியுங்கள் ஆசிரியர் இராமசேஷனின் கட்டுரையை.
  • ஈராக் போர்முனையில்: “இரண்டாம் நாள் இரவில், கூடாரத்தினுள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. அனைவரும் ஓடி வெளியே வந்தோம். கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும் சுவருக்குள் அனைவரும் சென்று பதுங்கி கொண்டோம். எங்களில் பலருக்கு அதுதான் முதல் முதலாக மிக அருகில் பெரும் சத்தத்துடன் பொழிந்த குண்டுமழை” என்று பாக்பா முகாமின் அனுபவங்களைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • நம்பிக்கை: ஒரு மனிதன் எதை இழந்தாலும் பெற்று விடலாம் அவன் தன்னம்பிகையை இழக்காதவரையில் என்று ஒரு பழமொழி உண்டு. இக்கதையில் ஒருவர் இழந்த தன்னம்பிக்கையை எவ்வாறு திரும்பப் பெருகிறார் விளக்குகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: ஒருவர் கற்றது, பெற்றது, வென்றது எதுவும் காப்பாற்றாது அவர் ஒழுக்கம் தவறும் போது. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட வேண்டும்” என்பதனை சமீபத்திய நிகழ்வுகளால் விளக்குகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I accept that my given data and my IP address is sent to a server in the USA only for the purpose of spam prevention through the Akismet program.More information on Akismet and GDPR.