03-17-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆனந்தசந்திரிகை 03-17-2019 இதழில்

தலையங்கம்: “வசந்ததின் ஆரம்பத்தில், முதலில் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், போர் வீரர்கள் மரணம். அதற்கடுத்து எத்தியோபியன் விமான விபத்து, அதையடுத்து பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றிப் பலத்காரம், அதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் மசூதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் எல்லா இடங்களில் இருந்தும் அவலக் குரலும், அழுகைக் குரலும் கேட்டாகிவிட்டது” என்று வருந்துகிறார் ஆசிரியர்.

உன்னை நம்பித்தானே வந்தேன்:  உன்னை நம்பித்தானே வந்தேன்  என்று அந்த பெண் கதறும் சத்தம் குளவியாய் என் காதுக்குள் இன்னும் குடைந்து கொண்டிருக்கிறது, என்று ஆரம்பித்து பொள்ளாச்சி சம்பவத்தை எண்ணிப் பொறுமுகிறார் கவிஞர் வீரா.

வாழும் கலை: ஆரோக்கியம் என்பது மனது சம்பந்தப்பட்டது. மனதில் கோபம், வேதனை போன்றவை தோன்றும் போது உடல் நலம் கெடுகிறது. இன்னா செய்தாரை மன்னித்தல் அவருக்கு உதவுவதை விட உன் உடல் நலம் காக்கிறது என்று அழகாக ஒரு சிறு கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரன்.

நான் என்றால்: என்ற கவிதையில் கவிதா.அ.கோ தன்னைத் தானே ஒரு ஆத்ம பரிசோதனை செய்கிறார். இப் பரிசோதனை அவருக்கு மட்டுமல்ல உங்களையும் கேட்க வைக்கும் “நான் யார்” என்று?

ஈராக் போர்முனையில்: “இரு பெண்கள் உட்பட அமெரிக்க நிறுவனம் சார்பாக பலர்பணியில் இருந்தனர். சன்னி நூறு கிலோ எடையுள்ள நல்ல உயரமான, குண்டான பெண். ஜெசிக்கா ஒல்லியான, குள்ளமான உடல்வாகு கொண்டவள். இருவரும் கறுப்பிகள். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு. ஜெசிக்காவிற்கு, மார்கல், மல்லிக் என இருமகன்கள். திருமணத்தில் விருப்பமில்லை. குழந்தை தேவைப்பட்டது,  பெற்றுக் கொண்டோம் என்றார்கள்” என்ற அமெரிக்கர்கள் கேட்டு வியப்பது நமது கலாச்சாரம் என்கிறார் ஷாகுல்.

திருமணம் டும் டும் டும்: “அவள் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்லப் போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் அது மாற்றம். அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழாதான் திருமணம்” என்கிறார் இக்கதையில் கேயென்னார்.

பூகம்பம்: இயற்கையே பெரிது என்று நினைவு படுத்தும் கேயென்னரின் கவிதை.

திரைவிமர்சனம்-கோலமாவு கோகிலா: திரைப்படத்தை மட்டுமல்ல நயன்தாராவையும் பாராட்டித் தள்ளிவிட்டார் இப்பட விமர்சனத்தில் ஆசிரியை திருமதி. லோகமாதேவி. அத்தனை பாராட்டுதல்களும் உண்மை.

மக்களால் மக்களுக்காக: ““வீட்டினிலே பெண்களைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்” என்று ஏளனம் செய்த நாம், இன்று விட்டில் பூச்சிகளாக வெளியே வந்து சுதந்திரமாகத் திரியும் பெண்களை பாதுகாக்கத் தவறி விட்டோம். ஆண்களைப் பலசாலியாகவும், வீரனாகவும், வளர்க்க விரும்பும் நாம் பெண்களை நளினமானவர்களாகவும், ஆண்களைச் சார்ந்தவர்களாகவும் வளர்க்கிறோம். முதலில் ஆணுக்குப் பெண் நிகர் என்று சொல்லும் நாம் அவர்களை நிகரானவர்களாக வளர்க்கத் தவறி விட்டோம்” என்று சாடுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மணித்துளிகள்: சுத்தும் ராட்டினத்தில் ஆரம்பித்து ஐவகை நிலங்களையும் முயல் போல் துள்ளிக் குதித்து வந்து சுற்றிக் காட்டுகிறார் கவிஞர் மணிமீ. எல்லோரும் சேர்ந்து சுற்றலாம்

பச்சை நிறமே…பச்சை நிறமே: குடுவையில் தோட்டமா? எவ்வளவு எளிது என்று விளக்குகிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி. நீங்களும் ஒரு குடுவைத் தோட்டம் தொடங்கலாமே?

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்… தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.

03-03-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தலையங்கம்: “ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாம் எப்போதும் சிறப்பு ஆண்டுமலர் வெளியிடுவோம். இவ்வாண்டும் அமோகமாக அச்சில் வெளிவருகிறது. மின்னிதழ் ஏப்ரல் 15ம் தேதி வெளிவரும். அச்சுப்பிரதி அதைத் தொடர்ந்து வெளியிடப்படும். 100+ பக்கங்கள், தமிழ் நாட்டிலிருந்து தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்” என்ற ஐந்தாம் ஆண்டிற்குள் நுழையும் ஆனந்தசந்திரிகையின் ஆண்டுமலர் அறிவிப்புடன் புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கிறார் ஆசிரியர்.

வாழும் கலை: “நேரமே இல்லை” என்று சொல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. நேரப் பராமரிப்பு (Time management) எல்லா வயதினரும், எல்லா காலத்திலும் கடைப் பிடிக்க வேண்டியது. எப்படி? என்பதை அழகாக ஒரு கதையின்மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரன்.

விடியுமா? இருளுமா?: என்ற கவிதையில் கவிதா கேட்கும் உழவர்களுக்கான இக்கேள்வி எல்லோரும் விடை காணத் துடிக்கும் ஒரு கேள்வி. கேள்வி மட்டும் நீண்ட காலமாகத் தொக்கி நிற்கிறது. பதில்??

ஈராக் போர்முனையில்: “ராணுவம் பீரங்கியை இயக்கும் கால அட்டவணையை உணவுக் கூடத்தின் அறிவிப்புப் பலகையில் அனைவரும் பார்க்கும் படி தொங்கவிட்டிருந்தனர். பீரங்கி வெடிக்கும்போது பெரும் சப்தம் வரும். எனவே அந்நேரத்தில் அனைவரும் தங்கள் காதுகளைப் பொத்தி பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அனைவரும் அட்டவணையில் உள்ள குண்டு வெடிக்கும் நேரத்தை நினைவில் வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டோம்.” என்று சாப்பாடுக்கானகால அட்டவணையிடுமிடத்தில் குண்டு வெடிப்பதற்கான அட்டவணையிடப் பட்டதை விளக்குகிறார் ஷாகுல்.

மரணப் போராட்டம்: மரங்களின் அவசியத்தை மரங்களில் வாயிலாகவே விளக்கும் சூழ்நிலை மேம்பாட்டுக்கு உதவும் கேயென்னாரின் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கதை.

ஜீவன்களின் சங்கமம்: உடன் வாழ்பவருடன் சேரமறுக்கும் மனித உலகில் சங்கமத்தின் சிறப்பை விளக்கும் கேயென்னாரின் கவிதை.

திரைவிமர்சனம்-96: ஆகா…ஒஹோ… என்று பாராட்ட ஒரு கூட்டம், அய்யே! என்று முகம் சுளிக்கும் இரண்டாவது கூட்டம் என்ற பிளவு பட்ட விமரிசனத்திற்கு உட்பட்ட “96” திரைப்படத்தை அவர் பாணியில் விமர்சிக்கிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி.

மக்களால் மக்களுக்காக: “தீவிரவாதிகள் நமது நாட்டு பாதுகாப்பு நிறைந்த எல்லைப் பகுதியில் அதுவும், நமது வீரர்கள் மொத்தமாக பயணிக்கும் போது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அவர்களுடைய உளவாளிகள் மூலம் நமது நாட்டின் எல்லைப் பகுதி போர் வீரர்களின் இயக்கம் தெரிந்திருக்கிறது. அவர்களின் உளவுப்படை நமது நாட்டின் உளவுத்துறையை விட நன்றாகச் செயல் பட்டுள்ளது. அவர்கள் செய்தி திரட்டுவதில் நமது நாட்டுச் செயற்கைக் கோளையையும் மிஞ்சியுள்ளார்கள். இது இன்றும் எட்டப்பர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று புல்வாமா தாக்குதலை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மணித்துளிகள்: குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதும் போது குழந்தையாகவே மாறி விடுகிறார் நமது கவிஞர் மணிமீ. இளமைத் தமிழ், பாப்பா கச்சேரி, பூனையும் எலியும் பற்றிய அனைத்துக் கவிதைகளும் அருமை.

பச்சை நிறமே…பச்சை நிறமே: குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூக்கும். அதன் காலக்கணக்கு எப்படி நிகழ்கிறது என்று விளக்குகிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்… தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.

02-15-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் அனைவருக்கும் “காதலர் தின வாழ்த்துக்கள்”. ஆனந்தசந்திரிகை 02-15-2019 இதழில் …

  • தலையங்கம்: அடுத்த இதழிலில் இருந்து ஆனந்தசந்திரிகை வெளியிடும் தேதியில் ஒரு சிறு மாற்றம் செய்ய இருக்கிறோம். அதாவது மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்றும், மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையன்றும் வெளியிட்டால் படிப்பவர்களுக்கு வார விடுமுறையில் படிக்க வசதியாக இருக்கும். எனவே அடுத்த இதழ் பிப்ரவரி 28-ம் தேதி வெளிவருவதற்குப் பதிலாக மார்ச்சு மாதம் 3-ம் தேதி வெளிவரும்.
  • உன் நலமன்றோ: கவிஞர்களுக்கு காதல் கவிதை எழுவது மிகப் பிடித்தமான செயல். இராம்கியும் அதற்கு விதிவிலக்கல்ல.
  • வாழும் கலை: நாம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் பலர் நம்முடைய கருத்துடன் ஒத்துப்போவதில்லை. கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது எப்படி? என்பதைக் கதை மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • வள்ளலார் குஞ்சு: மூலைக்கும், இதயத்திற்கும் ஏற்படும் முரண், அறிவிற்கும் உணர்விற்கும் ஏற்படும் முரண். முடிவில் இதயமே வெல்லும் என்பதைக் கவிதை பாடி உரைக்கிறார் நா.வீரா.
  • தூக்குத்தூக்கி: வாழ்வின் பாரம்தனை வார்த்தையால் விளக்குவது கவிஞருக்கே சாத்தியம். கவிதாவின் கவிதை கலங்க வைக்கும் உண்மை.
  • ஈராக் போர்முனையில்: “எதிர்பாராமல் முகத்தில் பலத்த அடி விழுந்ததில் நிலை தடுமாறிக் கீழே விழுந்த ஜோக்கிம், வாயிலும், மூக்கிலும் ரத்தம் சொட்டச்சொட்ட அடுமனையை நோக்கி ஓடி வந்தான். அவன் எதுவும் பேசவில்லை. சைகையால் கையசைத்தான். தூரத்தில் வைன் நின்று கொண்டிருந்தான். ஜோக்கிமிடம் யாரும் எதையும் கேட்கவில்லை. வைனின் அட்டுழியங்கள் அனைவரும் அறிந்ததே. அடுமனையிலிருந்தும், வெளியிலிருந்தும் வேலை செய்துகொண்டிருந்த பெருங்கூட்டம் ஒன்று வேகமாக ஓடியது வைனை நோக்கி” என்று உச்சக்கட்டத்தில் கதையை நிறுத்தியுள்ளார் ஆசிரியர் ஷாகுல்.
  • கொத்தடிமை: அடைக்கலத்துக்கு அவன் அடிமையாயிருப்பதும் புரிந்ததில்லை; சுதந்திரமாயிருக்க வேண்டும் என்பதும் தோன்றியதில்லை. சொல்லப் போனால் சுதந்திரமாயிருப்பது என்றால் என்னவென்றே அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அதை எல்லாம் தெரிந்து கொள்கிற அளவுக்கு அகர்வால் அவர்களை அனுமதித்ததே இல்லை” என்று சமுதாய அவலத்தைப் பறை சாற்றுகிறார் ஆசிரியர் கேயென்னார்.
  • காற்று விடு தூது: கேயென்னாரின் காதலர் தினக் கவிதை காற்றிடம் தூது விடும் அழகு.
  • திரை விமர்சனம்: “காதலி பயணிக்கும் பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத்தின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும் பிரமாதம், ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளைத் தெருவிலிருந்தபடி பார்த்து ஃபகத் புன்னகைக்கும் காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.” என்று நடிப்பு மொழிக்கு அப்பாற்பட்டது என்று முழங்குகிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: வலது கை புழுதி பெரிசா? இடதுகை மண்ணாங்கட்டி பெரிசா என்ற நிலையில் உள்ளது இந்தியாவின் அரசியல் என்று ஆதங்கப்படுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்காக எழுதப் பட்டாலும் ஆசை எண்ணம் முயற்சி வெற்றி அனவருக்குமான கவிதை என்கிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.
  • பச்சை நிறமே…: “பூக்களே காய் போல சதைப்பற்றுடன் இருப்பதால் அத்தி பூப்பதில்லை நேரடியாக காய்த்து விடுகின்றது என்னும் நம்பிகையின் பேரில் “அத்தி பூத்தாற்போன்று” எனும் ஒரு பழஞ்சொல்கூட வழக்கத்தில் இருக்கின்றது.” என்ற பழமொழிக்கு அறிவியல் விளக்கம் அளிக்கிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

01-31-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 01-31-2019 இதழில் …

  • தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழுவினர், நமது இணையதளத் தமிழ்ப் பள்ளியின் தமிழ்த் திறனாய்வுத் தேர்வினை அறிவிக்கிறார்கள்.
  • தையே வருக வருக: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ந. வீரா தை மகளை வரவேற்கும் கவிதையில் உழவனுக்கு இன்னும் ஒரு வழி பிறக்கவில்லை என்று ஆதங்கப் படுகிறார்.
  • வாழும் கலை: “செல்வம் சகடக்கால் போல வரும்” என்று நாலடியார் சொல்கிறது. செல்வம் மட்டும்தானா?” என்று ஒரு கேள்வியை எழுப்பி தன்னுடைய “சகடக்கால்” என்ற கதையில் அதற்குப் பதிலும் சொல்லுகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • ஆமை கொடிது: “ஆமை ஒரு சாதுவான பிராணி, அதனைக் கொடியது என்று கூற முடியாது” முதன்முறையாக நமது பத்திரிகையில் எழுதும் கவிஞர் கவிதா எந்த ஆமையைக் கூறுகிறார் என்று படித்துத்தான் பாருங்களேன்.
  • ஈராக் போர்முனையில்: “சாக்கடல் (Dead sea) இங்கு தான் இருக்கிறது. கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இயல்பாக மிதக்க முடியும். இந்த நீரில் உயிரினங்கள் வாழ இயலாது. அதையும் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் இங்கு  இருப்பது முன்பே தெரியாமல் போய்விட்டது”. என்று வருந்தி எழுதியுள்ளார் ஆசிரியர் ஷாகுல்.
  • உண்மையான ஞானம்: “அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.” இப்படியிருந்த மாணவனை எப்படித் திருத்தினார் ஆசிரியர் என்று இக்கதையில் விளக்குகிறார் கேயென்னார்.
  • தைப்பூசத் திருநாள்: ஆறுமுகனை ஆராதிக்கும் அழகான கவிதை. தமிழ்க் கடவுளைத் தமிழால் போற்றி வணங்குகிறார் கேயென்னார்.
  • திரை விமர்சனம்: “ஒரு காட்சியில் சிகரட் பிடிப்பது கெடுதலென்றும் அதை அனுபவத்தில் உணர்ந்தே சொல்லுவதாகவும் ரஜினி சொல்கிறார். 165 ஆவது படத்தில், 60 வயதைத்தாண்டி அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினி சொல்வதை, அவரைப்போலவே ஸ்டைலாக புகைபிடிக்கத் துவங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்று தெரியவில்லை” என்று சமூக அக்கறையுடன் பேட்ட திரைப்படத்தை விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கி விடும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…” என்று அரசியல்வாதிகள் செய்யும் வாக்குறுதிகள். மக்களின் வாக்கினை உறுதி செய்வதற்காக இதைக் கொடுப்பதால் அதனை வாக்குறுதிகள் என்று சொல்கிறார்களோ என்னவோ? வரும் மே மாதம் தேர்தல் முடியும் வரை இந்த ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.” என்று ஆரம்பித்து அரசியல்வாதிகளின் வாக்குறுதியை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • பொங்கல் விழா: அமெரிக்க டல்லஸ் மாநகரின் ஃப்ரிஸ்கோ நகரில் சனிக்கிழமை மாலை ஜனவரி 19 ஆம் தேதி 6.30 மணிமுதல் 11.00 மணிவரை “டாலஸ் தமிழ் மன்றம்” 2019 பொங்கல் விழாவை கொண்டாடியது. இந்த பொங்கல் இசை விழாவில் இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அவருடைய 40 ஆண்டுகள் “பாட்டுக்கு பாட்டை” டல்லாஸ் பாடகர்கள் பங்கு பெறும் வகையில் “டல்லஸ் தமிழ் மன்றம்” ஏற்பாடு செய்திருந்தது”. இந்த நிகழ்வை விளக்குகிறார் ஆசிரியர் மறைமலை.
  • மழலை மழைத்துளிகள்: நிலவையும், பெண்ணையும், பாரதியையும் போற்றிப் பாடாத தமிழ்க் கவிஞர் இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம். கவிஞர் மணிமீ கனத்த மீசை பாரதியை மட்டுமல்ல அவர் கொள்கைகளான ஆலயம் தொழுவதையும், படித்து உயர்வதையும் தன் மழலைக் கவிதைகளின் பாடியிருக்கிறார்.
  • பச்சை நிறமே…: “பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காக சுரக்கும் மாமரங்களிலும், வாசனையாக சுவையுடனிருக்கும் மகரந்தத்துகள்களையுடைய மலர்களுடன் கூடிய கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள், இருப்பதைக் காணலாம்”. அப்படியென்றால் கொய்யாப் பழத்தைச் சாப்பிட எறும்பு வரலையா? என்று வியக்க வைக்கிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

01-15-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 01-15-2019 இதழில் …

  • தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழு, உழவர் திருநாளில் உழவனின் உயர்வுக்கு பாடுபடுவோம் என்று அறிவுறுத்துகிறார்.
  • பொங்கல் தினம் பிறந்ததம்மா: பொங்கல் வாழ்த்துக் கவிதை – கேயென்னாரும், இராம்கியும் கலந்தாலோசித்து எழுதிய கூட்டு முயற்சிக்கவிதை.
  • வாழும் கலை: “என் வாழ்க்கைக்கு ஒரு புது லட்சியம் கிடைச்சிருக்கு. இதை இழக்க எனக்கு மனசில்லை. தவிர, நிறைய மொட்டுகள் கருகாமல் இருக்க, வாடிப்போன பூவிலேர்ந்து ஒரு இதழ் விழுந்தா என்ன? விழட்டுமே!” என்று ஒரு புதிய பாதையைக் காட்டுகிறார்” ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • ப்ரிடிஷ் நூலகம்: தான் சென்ற ப்ரிடிஷ் நூலகத்தை பற்றி எழுதும் ஆசிரியர் இராமசேஷன், நமது நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் நிலமையை எண்ணி ஆதங்கப் படுகிறார்.
  • ஈராக் போர்முனையில்: “டிசம்பர் மாதத்தில் திக்ரித்தில் முதல் முதலாக குண்டு வெடித்தது. அனைவரும் ஓடி பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் பதுங்கினோம். அதன் அருகில் இருந்த கழிப்பறைக்குள் கோவாவின் பெர்னாண்டோ மாட்டிக் கொண்டான். கழிப்பறை நெகிழியால் செய்யப்பட்டது. குண்டு விழுந்ததும் தெறித்த சிறு கற்கள் கழிப்பறையை துளைத்து கொண்டு அவனது கால்களை பதம்பார்த்தது.”  என்று திக்-திக் இதயம் துடிக்கும் வகையில் கட்டுரையைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
  • இணையில்லா தோழிக்கு: தமிழ்ப்பணிக்கு விருது பெற்ற ஆசிரியர் முனைவர். திருமதி. லோகமாதேவிக்கு ஆனந்தசந்திரிகையின் அன்புகலந்த வாழ்த்துக்கள்.
  • சிவா ஒரு புதிய மனிதன்: “வெளி உலகத்திற்கு சிவராமகிருஷ்ணன் மிகவும் அபிமானமுள்ளவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பொறுமையில்லாதவராக இருந்தார். எப்பொழுதும் எதையோ நினைத்துக் கொண்டும், தன்னை விட பெரிதாக வளர்த்தவர்களை கண்டு பொறாமை கொண்டும் வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார்” என்று மனித மனத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார் இக்கதையில் கேயென்னார்.
  • மலருக்கு மனம் இருந்தால்: மலருக்கு மணம் உண்டு என்று அனைவரும் அறிவோம். ஆனால் இக்கவிதையில் மலருக்கு மனம் உண்டு, அதில் எண்ணங்கள் உண்டு என்று மலரின் எண்ண ஓட்டத்தை கவிதையாய் வடிக்கிறார் கேயென்னார்.
  • திரை விமர்சனம்: இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆனந்தவிகடன் விருதை பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படத்தை “சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம். பல சமயங்களில்  காமிரா பெரும்பாலும் செந்நிறப்பரப்பும் இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாகக் காண்பிக்கிறது.” என்று தன் அழகான வரிகளால் விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: “பிரதமர் மோடி சமீபத்தில் கொண்டு வந்த இடஒதுக்கீடு பற்றிய அரசியல் சட்ட அமைப்பு சீர்திருத்தம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஜாதி அடிப்படையில் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாக கல்வி நிறுவனங்களிலும், அரசாங்க வேலை வாய்ப்புக்களிலும் 10 சதவீதம் இடங்கள் வருமானம் குறைந்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்” என்பதை மனம் திறந்து பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • தமிழ் நண்பர்கள் – பொங்கல் விழா: டல்லஸ் மாநகரில் நடந்த 4000+ தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அளவிலான பொங்கல் விழாவினை விளக்குகிறார் ஆசிரியர் சசிகலா.
  • மழலை மழைத்துளிகள்: தை தை என்று தாளமிட்டு வரும் மழலை கவிதையில் பொங்கலின் சிறப்பை குழந்தைகளுக்கு விளக்குகிறார் கவிஞர் மணிமீ. திருவள்ளுவர் தினத்திற்கும் ஒரு மழலைக் கவிதை உண்டு படித்துக் கொண்டாடுங்கள்.
  • பச்சை நிறமே…: உயிர்சிற்பக்கலை எவ்வாறு எந்த வித தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது போன்ற உயிரியல் தகவல்களைத் தருகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

12-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 12-31-2018 இதழில் …

  • தலையங்கம்: வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் குழு, இந்த வருடம் உங்கள் செயல் திட்டப்பட்டியலில், குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் தீர்மானம் நிறைவேற எங்களால் உதவமுடியுமானால் தயங்காமல் கேளுங்கள்” என்ற விண்ணப்பத்தையும் சேர்த்துள்ளார்.
  • தமிழினத்தின் அடையாளம்: கவிஞர் ந. வீரா தமிழினத்தின் அடையாளமாக யாரைச் சொல்லுகிறார்? சூரியனுக்கு வானம்சலித்தபோதெல்லாம் எவருடைய வார்த்தைகளுக்குள் வந்து போவான்? படிக்க வேண்டிய பரவசப்படுத்தும் கவிதை.
  • வாழும் கலை: பகவத்கீதையில சொன்ன பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் முதல் பதஞ்சலியின் எட்டு யோகநிலையைப் பேசி, சரவணனுக்குக் கிடைத்த சினிமாயோகம் வரை அழகாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர். உங்களுக்கு எந்த யோகம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
  • இராமானுஜம்: கணித மேதையின் தேற்றம் மட்டும் படித்தால் போதாது அவருடைய தோற்றத்தையும் கொண்டாடுவோம் என்கிறார் கவிஞர் ந. வீரா.
  • பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்: பழையசோறு போட்ட பாட்டிக்கு ஒரு ஊரையே எழுதிக் கொடுத்த மன்னர் கதை தெரியுமா? செவி வழிக் கதையினைப் பகிர்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “மறுநாள் முதல் உடுக்க ஆடை இல்லை. பொருத்தமே இல்லாத அளவில் ஒரு காற்சட்டையும், பனியனும் தந்தார்கள். கயிறால் அந்த காற்சட்டைக்கு மேல் கட்டிய பிறகுதான் அது இடுப்பில் நின்றது” என்று இடுப்பில் நிற்காத காற்சட்டையும், இதயத்தைவிட்டு அகலாத தீ விபத்தையும் விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர் ஷாகுல்.
  • குழந்தையின் கனவு: மிதுன் அம்மாவிடம் கதை கேட்டவாறே கண்களை மூடிட, அவன் கனவும் மெதுவாக விரிந்தது. அதே அவரை செடியும் காயும் கண்ணில் தெரிந்தது, அவரைக்காயைப் பறித்தவுடன் அது அம்மா வடிவில் தேவதையானது. அவன் அம்மாவை கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடிக்க அவள் அவனுக்கும் முத்தம் கொடுக்க அந்த இடங்களில் எல்லாம் பொன்மயமானது” என்று குழந்தைகளின் கண்கள் வாயிலாகக் கனவு காண்கிறார் கேயென்னார்.
  • மரியா ஈன்ற மகவு: துயரம் தொலைந்திட தூயவன் பிறந்த கதையைக் கவிதையாய் வடிக்கிறார் கேயென்னார்.
  • திரை விமர்சனம்: “Mountain between us” என்று இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது, உயிர்வாழவேண்டும் என்னும் ஆதார இச்சையும், அவரவர் வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகியிருந்த மாபெரும் பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில் கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது” என்று படிப்போரை பார்க்கத் தோன்றும் வகையில் விமர்சிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
  • மக்களால், மக்களுக்காக: “காக்கை குருவிகளைப் பார்த்து வளர்ந்த காலம் முடிந்து, வண்ண வண்ண டிரோன்கள் பறப்பதைப் பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. உலகின் ஒவ்வொரு மூலையும் கண்காணிக்கும் தொழில் நுட்பமும் தொலைவில் இல்லை” என்று தொல்லைதரும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத் தீர்வு காண்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்கான புத்தாண்டுக் கவிதை, தங்கநிலா, காற்றின் திசை என்று குழந்தைகளைக் குஷிப்படுத்துகிறார் மழலை கவிதைகளில் கவிஞர் மணிமீ.
  • பச்சை நிறமே…: ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, இந்தியா வந்திருந்த போது ஹூக்ளி நதியானது இங்கிலாந்தின் உள்ள தேம்ஸ் நதியைப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக கொல்கத்தாவிற்கு வருகை தரும்போது இதை கொண்டுவந்து ஹூக்ளியில் விட்டதாகக் கூறப்படுகிறது என்று ஆகாயத்தாமரை பற்றிய ஆச்சரியமான தகவல்களைத் தருகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

12-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 12-15-2018 இதழில் …

  • தலையங்கம்: பரிசு என்பது அன்பின் வெளிப்பாடு. நான் உன்னைப் பற்றி யோசித்து உன் தேவையை அறிந்து, உனக்கு என்ன பிடிக்கும் என்று தேர்ந்தெடுத்து வாங்கி வந்துள்ளேன் என்று சொல்லுவது. ஆனந்தசந்திரிகையும் கிறிஸ்துமஸ் தினத்தில் வாசகர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறது. அது என்னவென்று விளக்கியுள்ளார் ஆசிரியர். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • அர்த்தம் கூடியிருந்தது: ஒருவருடன் அன்பை பகிரும் போது, அதன் வெளிப்பாடாய் அவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் போது நம்மிடம் எதுவும் குறைவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் கூடுகிறது என்பதை கவிதையின் மூலமாகப் பாடியுளார் கவிஞர் ந. வீரா.
  • வாழும் கலை: பேரம் பேசுவது “சரியா? தவறா?” என்பது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள். உங்கள் பதில் எதுவாக இருந்தாலும், ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின் இக்கதையைப் படித்த பிறகு அது மாறும். கதையைப் படித்து பின் உங்கள் விடையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • மகாகவி பாரதி: மகாகவி பாரதிக்கு பிறந்தநாள் கவிதாஞ்சலி. பாரதி கண்ட கனவில் நிகழ்ந்தது எது? இன்னும் நிகழாதது எது? என்று தரம் பிரித்து ரெளத்திரம் கொள்கிறார் ஆசிரியர்.
  • ம.ப.பெரியசாமி தூரன்: “தொண்டில் கனிந்த தூரன்” எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியம் என்பவரால் தொகுக்கப்பட்டு “பாரதீய வித்யா பவன்” கேந்திரா வெளியீடாக வெளிவந்துள்ளது. இவர் மாற்றுக் கட்சிக்காரர், திராவிட சிந்தனை இல்லாதவர் என்பதாலோ என்னவோ தமிழகத் “தமிழ் விரும்பி அரசின்” பார்வை இவர்மீது படவில்லை!” என்று ஆச்சரியப்படுகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஐய்யனைக் காண்போம்: கார்த்திகை-மார்கழி மாதத்தில் மாலை போட்டு மலையேறும் ஐய்யப்ப பக்தர்களுக்காக கவிதை பாடிச் சரணம் சொல்லுகிறார் கேயென்னர்.
  • ஈராக் போர்முனையில்: கண்முன்னே, என்னுடைய அனைத்து பள்ளி, ஐடிஐ, தொழில் பழகுநர் சான்றிதழ்கள், முன்பு வேலைபார்த்த நிறுவனங்களின் அனுபவ கடிதங்கள், இன்னும் சிலநினைவுபொருட்கள், அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம், கடவுச்சீட்டு, கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் சில நிமிடங்களில்  சாம்பலாகிவிட்டது.  அடுத்து என்ன? என்ற கேள்வியை அனைவருக்கும் விட்டுச் செல்லுகிறார் ஷாகுல்.
  • அவள் அப்படித்தான்: “அப்படியே தலையில் இடி இறங்கியதுப் போல் இருந்தது முத்துலெட்சுமிக்கும், பழனிக்கும். அந்த ஒருநொடியில் அவர்களது எண்ணங்கள் அலைப்பாயத் தொடங்கியது. தன் மகளுக்கு என்ன நடந்ததோ? எங்கு இருக்கிறாளோ என்று. அப்பொழுது அங்கு ஒரு கார் வந்து நின்றது.” நடந்தது என்னவென்று அறிய படியுங்கள் கேயென்னாரின் இக்கதையினை.
  • திரைவிமரிசனம்:2.0: திருமதி. லோகமாதேவி எழுதும் புதிய பகுதி மாயசந்திரிகையில்” திரைவிமரிசனம், அதுவும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி பட விமரிசனத்துடன் விமரிசையாகத் தொடங்குகிறது.
  • மக்களால், மக்களுக்காக: “இவர் தனது கடைசி 10 ஆண்டுகளாக அணியும் காலுறை மக்களின் கவனத்தைப் பெற்றது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் அவர் அணிந்திருந்த காலுறை கப்பற்படைக்கு மரியாதை செய்வதாக அமைத்திருந்தார்கள்?” என்று காலம் சென்ற ஜார்ஜ் ஹெச். டபிள்யு. புஷ் அவர்களின் காலுறை சொன்ன கதைகளைத் தொகுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: கிறிஸ்துமஸ், சாண்டா, ரயில் வண்டி என குழந்தைகளுக்குப் பிடித்த அனைத்தையுமே மழலை கவிதைகளில் பரிசாய்த் தருகிறார் கவிஞர் மணீமி.
  • பச்சை நிறமே…: நாம் அனவருமே காப்பியில் சிக்கரி கலந்து குடித்துள்ளோம். சிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் சிக்கரி பயன்படுகின்றது. சிக்கரி என்பது விதையா, வேரா? இலையா? அல்லது காயா? தெளிவாக விளக்குகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

11-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 11-30-2018 இதழில் …

  • தலையங்கம்: இது ஒரு மகிழ்ச்சியும் துயரமும் கலந்த ஒரு தலையங்கம். மகிழ்ச்சியும் இரட்டிப்பாகியுள்ளது, துயரமும் இரட்டிப்பாகியுள்ளது. இத்தகையத் தருணங்களில் நமது கடமையை நினைவுப்படுத்துகிறார் ஆசிரியர்.
  • கஜாவின் கதை: நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டைக் கஜாவின் கதை என்ற கவிதையின் மூலமாகத் சாடியுளார் கவிஞர் ந. வீரா.
  • வாழும் கலை: நாம் எல்லோரும் கற்க வேண்டிய கலைகளில் ஒன்று கற்பனையாக மற்றவர் உள்ளத்தில் புகுந்து அவர் உள்ளக் கிளர்ச்சியை அறிதல், ஆங்கிலத்தில் சொன்னால் “To put yourself in their shoes” அதன் அவசியத்தை இக்கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • தொடாமல் மலர்ந்த கவிதை: காதலும் கவிதையும் பிரிக்க முடியாத ஒன்று. உடனிருந்தாலும் விலகிச் சென்றாலும் நிறம் மாறித் தொடர்ந்து வரும் என்கிறார் கவிஞர் ந. வீரா.
  • பிராமணத் தமிழ்: பிராமணத் வட்டாரத் தமிழின் செழுமையை விளக்குகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: போர்முனையில் ஏற்படும் அமைதி நிலைக்குமா? இருந்தாலும் அங்கே அமைதியான வாழ்க்கையிருந்தது என்பதை அழகாக விளக்கிப் படிப்போரை ஆசுவாசப்படுத்துகிறார் ஷாகுல்.
  • நன்றி நவில்தல் ஒரு சுவையே: காலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தாலும் “மனிதனின் நன்றி மறவா செயல்” நாளும் பாராட்டப்பட வேண்டியது என்பதை கவிதை பாடிச் சொல்லுகிறார் கேயென்னர்.
  • பறந்து வா பாட்டி: பாசமிகு அழைப்பிற்கு பறந்து செல்லுவாள் பாட்டி, என்பதை முதன் முறையாக ஆகாயமார்க்கமாகப் பறந்து செல்லும் பாட்டியின் கதையில் காட்டுகிறார் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: “ரோம் நகரம் தீப்பற்றி எறியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். இந்தக் கதையைப் படித்தவர்கள் இப்படி ஒரு மன்னன் இருந்தானா? மக்கள் துயரப்படும் போது அவர்களுக்கு உதவ வேண்டிய செயல்களைச் செய்யாமல் மொட்டை மாடியில் நின்று கொண்டு ஒரு மன்னனால் எவ்வாறு பிடில் வாசித்து மகிழ முடிந்தது?” என்ற கேள்விக்கு நிகழ்கால உதாரணம் தருகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்குப் பிடித்த தோசை, நாய்குட்டி, நன்றி நவிதல் நாள் விருந்து அனைத்தையுமே மழலை கவிதையாய்த் தருகிறார் கவிஞர் மணீமி.
  • பச்சை நிறமே…: அல்லியின் அகன்ற இலை 30 கிலோ வரை எடையைத் தாங்குமாம். ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கிறார் இந்த இதழில் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

11-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 11-15-2018 இதழில் …

  • தலையங்கம்: உலகமெல்லாம் வாழும் குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் கூறி உலகநாடுகளும், அமெரிக்க தமிழ்ச் சங்கங்களும் குழந்தைகள் தினத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆராய்கிறார் ஆசிரியர்.
  • குழந்தைகள் தினம்: குழந்தைகள் என்றாலே சந்தோஷம், குழந்தைகளை வாழ்த்திக் கவிதை எழுவது என்றால் இரட்டிப்பு சந்தோஷம். குழந்தைகள் தின வாழ்த்துக் கவிதையைத் தருகிறார் இராம்கி.
  • வாழும் கலை: பாலியியல் கல்வி அவசியமானது. இந்தியாவில் உள்ள 20 கோடி இளைய தலைமுறையினருக்கு இந்தக் கல்வி இன்றும் கிடைப்பதில்லை. அதன் விளைவுகளைக் கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • முத்துசாமி ஐயர்: இந்தியர் எவருக்கும் கிடைக்காத உயர்பதவியான சென்னை ஹைக்கோர்ட் தலைமை ஜட்ஜ் பதவி பெற்ற முத்துசாமி ஐயரைப் பற்றிய சுவையான தகவல்களைப் பகிர்கிறார் ஆசிரியர் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “டைகிரிஸ் ஆற்றை அரண்மனைக்குள் வரும்படி பாதை அமைத்து செயற்கையாக நீர்விழ்ச்சி அமைத்திருந்தனர். நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்தில் பெரிய நீச்சல்குளமும், குளியலறை, நவீன சமையலறை போன்ற அனைத்து வசதிகளும் அருகில் இருந்தன. சர்வாதிகார மன்னன் சதாமின் ஆடம்பரம் அங்கு தெரிந்தது” என்று சதாமின் வாழ்க்கை முறையை வர்ணிக்கிறார் ஷாகுல்.
  • விடை பெற்ற கனவு: “பாழாய்ப் போவதற்கா, காலத்தை விரயமாக்கி பட்டப் படிப்பை பூர்த்தி செய்தோம்?இக்கட்டான சூழலில் இரண்டு தோள்கள் ஆதரவாய் சேர்ந்தால், குடும்பப் பாரம் சுமக்கும் நிரஞ்சனுக்கு எத்தனை ஆதரவாய் இருக்கும்?” என்று எண்ணும் மனைவியின் எண்ணம் நிறைவேறியதா? என்று படித்தறியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
  • மக்களால், மக்களுக்காக: “நமது சமுதாயத்தில் திருமணம் என்பது சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்டச் சடங்கு. அது காதலைத் தவிர பலவேறு காரணங்களால் நிகழ்த்தப்படுவது. காதல் இல்லையேல் சாதல் என்ற பாரதியின் வரிகளை நினைவு படுத்துகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: சிறு கவிதைகளால் படிப்பவர்களைக் சிறு குழந்தைகளாக்கிப் பார்க்கும் வல்லமையுள்ள திரு. மணீமி கவிதைகள் இந்த இதழுக்குச் சிறப்பு.
  • பச்சை நிறமே…: ஆர்கிட் பூக்கள் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் இருக்கிறதாம். நமது இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் பெயரில் கூட ஒரு மலர் இருக்கிறதாம். மலர்களை அள்ளித் தெளித்து அசத்துகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.

10-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 10-31-2018 இதழில் …

 

  • தலையங்கம்: இனிய தீபாவளித் திருநாளுக்கு நல்வாழ்த்துக்கள் கூறி, பாதுகாப்பான, சூழ்நிலையை அசுத்தப்படுத்தாத வகையில் தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியர்.
  • தீபாவளி வாழ்த்துக் கவிதை: தீபாவளி வாழ்த்துக் கவிதையைத் தருகிறார் இராம்கி.
  • வாழும் கலை: அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. மதமும் ஜாதியும் என் செய்யும் என்பதனை நட்பின் அன்பால் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • திருமங்கைஆழ்வார்: அவரை மணக்க குமுதவல்லி நிபந்தனை ஒன்று விதித்தார். ‘நீர் எக்குலத்தாராய் இருப்பினும் வைணவராயின் என்னை மணக்கலாம் என்றார். அதனை ஏற்று நீலன் திருநிறையூர் நம்பி அவர்களிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமண்காப்புடம் குமுதவல்லி நாச்சியார் முன் நின்றார். ஏன் என்று அறிய படியுங்கள் ஆசிரியர் இராமசேஷனின் கட்டுரையை.
  • ஈராக் போர்முனையில்: “மும்பையின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையுடைய மாடி அறை. கோடையில் பகலில் அறையில் இருக்கவே முடியாது. அனல் போல் கொதிக்கும் வெப்பம். அறையிலிருந்து மாஹிம் ரயில் நிலையம் போகும் வழியில் நடைபாதையில் இருக்கும் மரத்துக்குக் கீழ் உள்ள சுவரில் தான் பெரும்பான்மையான நாட்களை கழித்திருப்பேன். பட்டினியாக வேலை தேடிய நாட்களே அதிகம். எனவே மும்பை திரும்பி போவதில்லை என்பதில் உறுதியானேன் என்று துணிந்த ஷாகுல் எங்கே போனார் என்று படித்தறியுங்கள்.
  • உன் நினைவாய்: “முகத்தைத் துடைத்து விட்டு பக்கத்திலிருந்த சின்னப் பெட்டிக்குள் இருந்த குங்குமத்தை எடுத்தாள். “இப்ப வைக்காதே உடனே அழிஞ்சு போயிடும்” அஜித் சொன்னதை பொருட்படுத்தாமல் பொட்டு வைத்து விட்டு சாய்ந்து கொண்டு “பசிக்குது அஜித்”. அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.” அவள் குங்குமம் நிலைத்ததா என்று படித்தறியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
  • மக்களால், மக்களுக்காக: “கடந்த காலத்தைக் கண்ணாடியில் மட்டும் பார்த்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிக் கார் ஓட்ட முடியாது. அவ்வப்போது கண்ணாடியைப் தற்காப்புக்காகப் பார்க்கலாம், நாம் போக வேண்டிய பாதை முன்னால் உள்ளது என்பதை நினைவில் கொள்வோமாக” என்று நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுடன் பாடிப் பழக தீபாவளி பற்றிய வண்ணக் கவிதைகளை வாரி வழங்கியுள்ளார் திரு. மணீமி. தீபாவளிக்கு கிடைத்த இனிப்பு.
  • பச்சை நிறமே…: நிறம் மாறும் மனிதர்கள் உண்டு, விலங்குகளும் உண்டு. பூக்களும் உண்டா? வியப்பில் ஆழ்த்துகிறார். – திருமதி. லோகமாதேவியின் புதிய தொடர்.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.