08-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 08-15-2018 இதழில் …

  • தலையங்கம்: ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நமது தமிழ்ப்பள்ளி ஒரு புது சேவையைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு www.ilearntamilnow.com தொடங்கிய புதிய சேவை என்ன? தெரிந்து கொள்ளப் படியுங்கள்.
  • கவிதாஞ்சலி: கலைஞரின் எதிரிகள் கூட அவருடைய தமிழை நேசிப்பர். அவர் மறைவுக்கு மணீமீ, கேயென்னார், பாபாராஜ் அவர்களிடமிருந்து வந்த இரங்கல் கவிதைகளை அவருக்கு கவிதாஞ்சலியாகப் படைத்துள்ளோம். அவர் ஆத்மா சாந்தியடைவதாக.
  • வாழும் கலை: கீரி எதற்காக மண்ணில் புரள்கிறது? புரள்வதால் எப்படி பொன்னிறமாகிறது? என்ற உதாரணத்துடன் வந்தோரை உபசரிக்கும் முறையைப் பற்றி எழுதுகிறார் தனது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • குமரகுருபர ஸ்வாமிகள்: தமிழ் வளர்த்த பெரியோர்களைத் தமிழர்களுக்கு மறுஅறிமுகம் செய்து வரும் இராமசேஷன், இந்த வாரம் செய்யும் அறிமுகம் குமரகுருபர ஸ்வாமிகள். கட்டுரையைப் படிப்பதோடு விட்டு விடாமல் அவர் எழுதிய மீனாட்சி பிள்ளைத் தமிழையும் தேடி எடுத்துப் படியுங்கள்.
  • ஈராக் போர்முனையில்: குவைத்திலிருந்த ஷாகுல் ஹமீது தன் கூடாரத்தைவிட்டு ஏன் ஈராக்குக்குப் போனார். அதுவும் போர் நடக்கும் போது. என்ற திருப்புமுனையில் கட்டுரையை பாலைவனத்தைவிட சூடு பறக்கும் தகவல்களுடன் எழுதியுள்ளார் ஷாகுல்.
  • மாறனின் எதார்த்தம்: சிறு செயல்கள், சிறு கைமாறுகள், சிறிய சிந்தனை பெரிதாக மதிக்கப்படும் என்பதை சிறுகதையின் மூலம் தெளிவாகச் சொல்லுகிறார் கதாசிரியர் கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: “சுப்பையா சொன்ன சுதந்திரம் எப்பையா வந்தது?” என்ற வரிகளின் படி சுதந்திரத்தால் பெற்றதை விட விட்டதுதான் அதிகம் என்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Download “Anandachandrikai app” from the respective App Store:

Android Phone Users: https://goo.gl/MoA3Ni

Apple/iOS Phone Users: https://goo.gl/wirr2C

07-31-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். ஆனந்தசந்திரிகை 07-31-2018 இதழில் …

  • தலையங்கம்: நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, தமிழ்த் திறானாய்வுத் தேர்வின் முடிவுகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். யார் வென்றார்கள் என்பதை அறிய இவ்விதழைப் படியுங்கள்.
  • வாழ ஏற்றதா தமிழகம்?: அயனாவரத்தில் நிகழ்ந்த அவலம் தமிழர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்து விட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இன்று வாழ ஏற்ற இடமாக இருக்கிறதா? என்று கண்ணீரில் கவிதை எழுதி படிப்போர் நெஞ்சத்தை நனைக்கிறார் இராம்கி.
  • வாழும் கலை: “இப்போ யார் பொய் சொல்லலை? அரசியல்ல பாதிக்குமேல பொய்தானே. வரவர பழகிப்போயிடுத்து” என்று ஏற்றுக் கொண்டு, சிறு பொய்களில் ஆரம்பித்து, பொய்க்கும், பொய்யான வாழ்க்கைக்கும், பொய் சொல்கிறவர்களுக்கும் நாம் அடிமையாகி விடுகிறோம். பொய் சொல்லுபவர்களை உங்களால் அறிய முடியுமா? அவர்களிடம் சாமர்த்தியமாக கேள்வி கேட்டு, உண்மையை உங்களால் பெற முடியுமா? என்று சோதிக்க ஒரு புதிரையும் சேர்த்துள்ளார் தனது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். புதிருக்கு விடை கொடுத்து பரிசைப் பெறுங்கள், சவாலுக்குத் தயாரா?
  • பாண்டித்துரைத் தேவர்: தமிழை மட்டுமல்லாது, தமிழுக்குச் சேவை செய்த அறிஞர்களையும் மறக்கலாகாது என்று தனது கட்டுரையின் மூலம் தமிழ்க்காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவரை தமிழ் இனத்திற்கு மீண்டும் அறிமுகப் படுத்தி பெருமை கொள்கிறார் இராமசேஷன்.
  • ஈராக் போர்முனையில்: “பாலைவனத்தில் கூடாரம், வேலையோ சமையல் அறையின் அடுப்பின் அருகில். மேலேயும் சூடு. அருகிலும் சூடு” என்று சூடு பறக்க தன் கட்டுரையைத் தொடர்கிறார் ஷாகுல் ஹமீது. தொடர்ந்து படியுங்கள்.
  • ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: இந்த இதழில் வாஷிங்டன் டி.ஸி-யின் சிறப்புகளை, ஆசிரியர் சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் கதையில் வரும் வசனங்களோடு சேர்த்து சுவைபடச் சொல்லுகிறார் வ. செளந்தரராஜன். பழைய நினைவுகளைத் தூண்டும் புதிய அனுபவம்.
  • நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
  • மக்களால், மக்களுக்காக: பிரதமர் மோடி விடுத்துள்ள “2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்” என்ற அறிவிப்பு சாத்தியமா? அல்லது இது தேர்தலுக்காக நடந்தும் “மோடி மஸ்தான்” வேலையா? விவசாயிகள் சிறப்படைய என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Download “Anandachandrikai app” from the respective App Store:

Android Phone Users: https://goo.gl/MoA3Ni

Apple/iOS Phone Users: https://goo.gl/wirr2C

07-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 07-15-2018 இதழில் …

  • தலையங்கம்: பனிக்கூழ் தினத்திற்கு வாழ்த்துக்கள் கூறும் ஆசிரியர் பனிக்கூழ் தினத்தன்று அமெரிக்க வாழ் தமிழர்கள் மனதை எவ்வாறு குளிர்ப்பிப்பது என்பதையும் விளக்குகிறார்.
  • என் கடைசி மூச்சுக்காற்றும்: என்னுடன் பிறந்தாய், தவழ்ந்தாய், வளர்ந்தாய், இணைபிரியாமல் மகிழ்ந்தாய், என் கடைசி மூச்சுக் காற்றும் நீதான் என்று கவிஞர் யாரைச் சொல்லுகிறார் என்று அறிய இக்கவிதையை நீங்கள் படிக்கத்தான் வேண்டும்.
  • வாழும் கலை: பெரியோரைப் பிழையாமை என்ற தலைப்பில் தமிழ்க் குடும்பங்களிலும் தமிழ் மேடைகளிலும் நடக்கும் தவறைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் ஸ்ரீதர், உலகிற்கே கலாச்சாரம் சொல்லிக் கொடுத்ததாகப் பெருமை கொள்ளும் நாம், பெரியோரை மதிப்பதிலும், காலம் தவறாமையிலும் சரிவரக் கவனம் செலுத்துவதில்லை எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர்.
  • ஈராக் போர்முனையில்: ஷாகுல் ஹமீது நமது பத்திரிகைக்கு எழுதும் “கன்னி” கட்டுரைத் தொடர் எனலாம். அரபு நாடுகளில் வசிக்கும் இவர் நமது பத்திரிகையில் எழுதும் ஆவலில் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறார். ஈராக் போரின் போது தாம் நேரில் கண்டவற்றை காணொளிக் காட்சி போல் சுவைபட எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.
  • மக்களால், மக்களுக்காக: மக்களின் தேவைகளை அரசாங்கம் கண்டறிந்து செயல்படுகிறாதா? அவ்வாறு செயல்பட என்ன செய்யவேண்டும். ஜனநாயகமே சிறந்ததென்று மார்தட்டிச் சொல்லும் நாம், அதை மேலும் சிறப்படைய என்ன செய்ய வேண்டும் என்பதை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

06-30-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-30-2018 இதழில் …

  • தலையங்கம்: அமெரிக்க சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களோடு ஆனந்தசந்திரிகை இதழும், இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளியும் சேர்ந்து நடத்திய தமிழ் திறனாய்வு தேர்வின் முடிவுகள் எப்போது வருகிறது என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.
  • பால் நினைந்தூட்டும்: ஒரு சேயின் ஜனனம், தாயின் மறு ஜனனம் என்று தன் தாயின் அன்பினை நினைவில் கொண்டு வருகிறார் கவிதையாக, நமது புதுக் கவிஞர் ஜானகி நம்பி நாராயணன்.
  • வாழும் கலை: இடையில் வந்த சாதி என்னும் பூதம் சென்றொழிந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் உய்யும் எனச் சாடுகிறார் தமது கட்டுரையில் ஸ்ரீ ஸ்ரீதர். உலகமே ஏற்றுக் கொண்ட மாஸ்லோவின் தேவை-படியமைப்பு-கோட்பாட்டயும் தகர்த்துவிடுகிறது இந்த சாதி என்னும் பூதம். சாதி ஒழியுமா என்பதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
  • ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்: சத்தமின்றிச் சலனமின்றி மயாமியின் தெருக்களில் உங்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுகிறார் ஆசிரியர் வ. செளந்தரராஜன்.
  • மக்களால், மக்களுக்காக: மனித வாழ்க்கையே ஒரு போராட்டமென்ற நிலையில், தெருவில் இறங்கிப் போராடுவது ஜனநாயக நாட்டிற்கு தேவையா என்று அலசுகிறார் இராம்கி இராமகிருஷ்ணன். ஏன் புரட்சிகளும், போராட்டங்களும் தோன்றுகின்றன என்பதையும் ஆராய்கிறார்.
  • நொடியில் மரணம்: ஆங்கில படத்தின் வேகமும், தென்னிந்திய திரையின் திடீர் திருப்பங்களையும் சேர்த்து ஒரு “ஆக்சன்” கதையினை அழகாகச் சொல்லுகிறார், கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

06-15-2018 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம்.

ஆனந்தசந்திரிகை 06-15-2018 இதழில் …

 

தலையங்கம்: வடகொரியாவின் அணு ஆயுதத்தைவிட மக்களை அதிகம் அச்சுறுத்துவது எது என்பதை விளக்குகிறார் ஆசிரியர்.

இயற்கையே கடவுள்: பஞ்சபூதங்களால் நிரம்பிய உலகை, மதமும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் சூழ்ந்து வருகிறது. அவைகளால் உருவாக்கப்பட்ட “மாயமான்” தோற்றத்தைப் புரிந்து கொண்டு, நாம் போற்றவேண்டியதும், துதிக்க வேண்டியதும் இயற்கையே என்பதைக் கவிதை பாடி விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.

தந்தையர் தின வாழ்த்துகள்: தந்தையின் கண்களின் நீரில் அன்பு வெளிப்படும், ஆனால் அதற்கு அளவுகோல் இல்லை என கவிதைபாடி, தந்தையின் உயர்ந்த உள்ளத்தை வாழ்த்துகிறார் கேயென்னார்.

விரல்விடு தூது: முனைவர் திரு. ஞானசம்பந்தன் அவர்களின் கலகல கட்டுரை. கற்காலம் முதல், இக்காலம் வரை, அன்னம், கிளி, புறா, தோழி என காதலர்களுக்குத் தூதாகப் பல சென்றிருந்தாலும், இக்காலத்தில் விரல்விடு தூதே சிறந்ததென்று சொடக்குப் போட்டுச் சொல்லுகிறார் ஆசிரியர்.

வாழும் கலை: ஒருவர் சொல்வது மற்றவருக்கு அப்படியே புரிந்து விட்டால் உலகின் பல உறவு சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஒருவர் சொல்லாமலேயே மற்றவருக்குப் புரியுமானால் உறவுகள் பலப்படும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீதர்.  

மக்களால், மக்களுக்காக: இந்தியாவை ஆட்கொண்டுள்ள பிரச்சனைகளை மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம் என்கிறார் இராம்கி இராமகிருஷ்ணன். அதன் தீர்வுகள் எப்படி என்பதையும் ஆராய்கிறார்.

ஆசையே அலைபோல: மனிதன் ஆசைகளுக்கு அடிமை, ஆசைகளோ அலைபோல வந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை என்பது அந்த அலையில் பயணம் செய்வதா, அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதா என்பதை கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.

தமிழ்ப் பேரவை-அழைப்பிதழ்: ஜுன்30, 31, ஜுலை 1-ம் தேதிகளில் டல்லஸில் நடக்கும் தமிழ்ப் பேரவைக்கான அழைப்பிதழும் விழா விவரங்களும்.

குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

05-31-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழில் …

  • தலையங்கம்: “மெமோரியல் டே” வாழ்த்துக்கள் கூறலாமா? கூடாதா? விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • அஹிம்சைக் கொலை: அண்ணல் பிறந்த நாட்டிலே அஹிம்சையைக் கொல்லுகிறார்கள் என்று தூத்துக்குடி சம்பவத்தை நினைத்து கவிதையில் மனம் பதைக்கிறார் இராம்கி.
  • வாழும் கலை: இகிகாய் என்றால் தெரியுமா? பள்ளியை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது மாணவப் பருவத்தின் குழப்பம். அவர்களுக்கு எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ ஸ்ரீதரன்.
  • நான் இங்கே இருக்கிறேன்: தவறு சிறியதாக இருந்தாலும், அதன் விளைவு விபரீதமாக அமையலாம் என்பதை நெஞ்சைப் பிழியும் விதத்தில் கதையாகச் சொல்லுகிறார் முரளி.
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: சியேட்டல் நகரில் வாழும் மக்களைப் பத்து விதமாகப் பிரிக்கலாம் என்கிறார் கட்டுரை ஆசிரியர் வ. செளந்தரராஜன். நீங்கள் எந்த ரகம் என்றும் யோசிக்கலாம்.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா (சென்ற இதழின் தொடர்ச்சி).
  • மக்களால், மக்களுக்காக: சமுதாய அக்கறையுடன், சட்ட, சமூக, தொழில்நுட்ப, அரசியல் மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தும் தொடர் கட்டுரையைத் தொடங்கி, மாறாதது தேறாது என்கிறார் இராம்கி.
  • கண் திறக்க வேண்டும்: வளர வேண்டியது குழந்தைகள் அல்ல, பெற்றோர்கள் தான் என்று ஒரு காதல் கதையின் மூலம் விளக்குகிறார் கேயென்னார்.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, கற்க, கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

ஆனந்தசந்திரிகை 05-31-2018 இதழ் வெளியாகிவிட்டது. நீங்கள் படித்து விட்டீர்களா?

 

05-15-2018 ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 05-15-2018 இதழில் …

  • தலையங்கம்: தமிழன்னைக்கு, தமிழன் கொடுக்கும் “விலையில்லா” தமிழ்ப் பரிசு எது என்று விளக்குகிறார் ஆனந்தசந்திரிகை ஆசிரியர்.
  • பயனுள்ள பனைமரம்: பனைமரம் இத்தனைப் பயன்களைத் தருகிறதா? – வியக்க வைக்கும் கவிதை.
  • அன்னையரை நினைத்திடுவோம்: அரசன் முதல் ஆண்டிவரை, ஏன் ஆண்டவன் வரை என்று கூடச் சொல்லலாம், இவர் அனைவருக்கும் பொது அன்னையின் அன்பு. அவரை நினைத்திடுவோம் என்று கவிதை பாடி அழைக்கிறார் கேயென்னார்.
  • வாழும் கலை: இரத்தலும், ஈதலும் இன்பம் அளிப்பவையா? முடிந்தால் கொடுங்கள். முடியலையா? அப்போ கேட்காமலாவது இருங்கள். கேட்கவேண்டிய பரிதாபமான நிலையா? அப்போ யார் முகம் சிணுங்காம அன்போட கொடுக்கறாங்களோ, அவங்க கிட்டபோய்க் கேளுங்கள். ஸ்ரீ ஸ்ரீதரனின் கொடுக்கல் வாங்கல் பற்றிய இலக்கிய அலசல்.
  • கல்சுபாய்: ஆழ்மனத்தின் ஆதிக்கம் ஆளை இப்படி ஆட்டிப் படைக்குமா கதையால் விளக்குகிறார் கேயென்னார்.
  • எழில்மிகு இலங்கை: இலங்கைக்கு இன்பச்சுற்றுலா சென்று வந்த இராமசேஷன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.
  • ஸ்டீவன் ஹாக்கிங்: ஏன் என்ற கேள்வி மட்டும் என்றைக்குமே மிஞ்சும் என்பதை ஆமோதிக்கும் சக்கர நாற்காலியிலிருந்து சாதனை புரிந்த ஸ்டீவன் ஹாக்கிங்-ன் வாழ்க்கைப் பற்றிய ஸ்ரீ ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை.
  • வெற்றியின் விலை? விலை கொடுத்து வாங்குவதில்லை வெற்றி. ஆனால், வெற்றி அதன் விலையை எடுத்துக் கொள்ளும் என்கிறார் கதாசிரியர் வீரா.
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு
  • பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

04-30-2018-ஆனந்தசந்திரிகை

ஆனந்தசந்திரிகை 04-30-2018 இதழில் ….

  • பட்டணத்தில் பூதமாய் வந்தது யார்? அவர் தந்தது என்ன? – ஸ்ரீ ஸ்ரீதரன் கவிதையாய் சொல்லுகிறார்.
  • வச்சிட்டான்யா ஆப்பூ: யார் யாருக்கு வைத்தார்கள் ஆப்பூ – கொங்குதமிழில் இராம்கி இராமகிருஷ்ணனின் கட்டுரை.
  • வாழும் கலை: தமிழ் கலாச்சாரத்தில் ஆணுக்குப் பெண் நிகரா? – ஸ்ரீ ஸ்ரீதரனின் வாக்குவாதம் …
  • கல்சுபாய்: கல்சுபாய் சிகரத்தில் சந்திரகாந்துக்கு நிகழ்ந்தது என்ன? – கேயென்னாரின் கதை
  • ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்: லாஸ் வேகாஸில் நடப்பது அங்கேயே இருக்கட்டும் என்பார்கள். செளந்தரராஜன் பயணக் கட்டுரையில் அந்த ரகசியத்தைக் காப்பாற்றினாரா?
  • தர்மம் தழைக்க உதவும் மகாபாரதம்
  • தங்கத்தைப் புறம் தள்ளியது எது? நாடு எங்கே போகிறது? என்று ஆதங்கப்படும் வீராவின் கட்டுரை …
  • குழந்தைகளுக்கான மின்சாரத்தின் கதை, தமிழ்த்தேனீ, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

 

ஆனந்தசந்திரிகை 04-15-2018

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். 

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆனந்தசந்திரிகை 04-15-2018 இதழ் ஆண்டுமலராக வெளியாகியுள்ளது.

100+ பக்கங்கள்.

1000 பிரதிகள் புத்தகமாக அச்சில் வெளியாகியுள்ளது.

மின்னிதழாகவும் வெளியாகியுள்ளது.

தமிழ் இலக்கிய பிரபலங்கள் பலர் பங்களித்துள்ளார்கள்.

தமிழ் படிக்கும் அன்பர்களுக்கு மிக அருமையான புத்தாண்டு பரிசு. அது மட்டுமல்ல Android கைபேசி உபயோகிப்பவர்களுக்காக ஆனந்தசந்திரிகையின் செயலியும் வெளியிட்டுள்ளோம்.  Google Play Store-ல் இருந்து தளவிறக்கம் செய்யலாம். Iphone உபயோகிப்பவர்கள் இன்னும் சிலநாட்களில் செயலியை Apple Store-ல் இருந்து தளவிறக்கம் செய்யலாம். தமிழ் படிக்கும் அன்பர்கள் இப்போது செயலியில் படிக்கலாம்.

தமிழ்க் குடும்பங்கள் படித்து பகிர்ந்து மகிழவும். வியாபார நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுக்கு வரும் தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகித்து மகிழவும்.

மின்னிதழை, தளவிறக்கம் செய்து படிக்க https://drive.google.com/open?id=0B-2zfBawRs7Ta3BLeWl5VVdycnc இணைப்பில் சொடுக்கவும்.

இப்பத்திரிகையின் முந்தைய மின்னிதழ்களைப் படிக்க https://drive.google.com/open?id=0B-2zfBawRs7TYy1ydjd3OVBXX2s சொடுக்கவும்.

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.

இராம்கி இராமகிருஷ்ணன்.